Posts

ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.யில் சேர்ந்து படிப்போமா...!

Image
ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.யில் சேர்ந்து படிப்போமா...! ஐ.ஐ.டி., என்.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படிப்பது என்பது பல மாணவர்களின் கனவு. ஆனால், அது இறுதிவரை பலருக்கும் கனவாகவே இருந்துவிடும். ஏனெனில் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் வழிதவறிவிடுவார்கள். அப்படி ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி. பற்றிய புரிதலை உண்டாக்கும் தொகுப்பாக இதை பதிவு செய்கிறோம். ஐ.ஐ.டி (IIT - Indian Institute of Technogy):  மற்ற பொறியியல் கல்லூரிகளைப் போல வெறும் பிளஸ்-2 மதிப்பெண்களை மட்டுமே வைத்துக்கொண்டு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் நுழைந்து விட முடியாது. இதற்கென்று தனியாக நுழைவுத்தேர்வுகள் இருக்கின்றன. ஜே.இ.இ. மெயின் தேர்வினை எழுதி, அதில் அதிக கட்- ஆப் மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றால்தான், ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.களில் நுழைய முடியும். பாடப்பிரிவுகள்: பி.டெக்., இளநிலையில் ஏரோஸ்பேஸ், விவசாயம், செராமிக், எனர்ஜி, தாது வளங்கள், நேவல் ஆர்கிடெக்‌ஷர், ஓஷன் என்ஜினீ யரிங், பயோ டெக்னாலஜி, கெமிக்கல், பயோ மெடிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் டெலி கம்யூனிகேஷன், எல...

மருத்துவ இடம் வாங்கித் தருவதாக மோசடி நடப்பது எப்படி? - காவல் துறை எச்சரிக்கை!

Image
மருத்துவ இடம் வாங்கித் தருவதாக மோசடி நடப்பது எப்படி? - காவல் துறை எச்சரிக்கை! ‘மருத்துவம் படிப்பதற்கு கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களை மாணவர்கள் நம்ப வேண்டாம்’ என காவல் ஆணையர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வு மூலமாக மட்டுமே மருத்துவ சேர்க்கைக்கான இடஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. எனவே, மாணவர்கள் விழிப்போடு இருக்கவேண்டும். மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்கள் யாரையும் நம்ப வேண்டாம். அரசின் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்வதன் மூலமும், கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள சேர்க்கை மையத்தை தொடர்பு கொள்வதன் மூலமாக மட்டுமே மருத்துவ படிப்புக்கான இடத்தை ஆலோசனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பிக்க நாளை ஆகஸ்ட் 18) கடைசிநாள்!

Image
துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பிக்க நாளை ஆகஸ்ட் 18) கடைசிநாள்! Application for Diploma and Certificate Paramedical courses at Govt. and private colleges in Tamilnadu. பாா்வை அளவியல், மருந்தியல் உள்பட 9 வகையான மருந்தியல் பட்டய படிப்புகளுக்கும், 13 வகையான சான்றிதழ் படிப்புகளுக்கும், இருவேறு மருத்துவ ஆவணப் படிப்புகளுக்கும் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. அதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு www.tnmedicalselection.org என்ற இணையதளம் வாயிலாக புதன்கிழமை தொடங்கியது. நாளை வரை தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இரு ஆண்டுகள், ஓராண்டு, ஆறு மாத கால படிப்புகளாக பயிற்றுவிக்கப்படும் அப்படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேடு, கூடுதல் விவரங்கள் மருத்துவக் கல்வி இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க https://reg25.tnmedicalonline.co.in/cert25/? என்ற லிங்கை சொடுக்கவும். வழங்கப்படும் படிப்புகள்:  DIPLOMA IN PHARMACY DIPLOMA IN OPTOMETRY DIPLOMA IN MEDICAL RECORD SCIENCE DIPLOMA IN NEUROSURGICAL TECHNOLOGY AND RESEARCH MULTI PURPOSE HOSPITAL WORKER OTHER PARA...

பிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி?எவ்வாறு திருத்தம் செய்வது?

Image
பிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி? எவ்வாறு திருத்தம் செய்வது? வீட்டுக்குப் புதுவரவாக என்ட்ரி கொடுக்கும் மழலைகளுக்கு அரசின் முதல் அங்கீகாரம் பிறப்புச் சான்றிதழ் (Birth certificate). அந்தக் குழந்தையின் எதிர்காலம் முழுமைக்கும் முக்கிய ஆவணமாக இந்தச் சான்றிதழே உடன்வரும். அப்படிப்பட்ட பிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி? எவ்வாறு திருத்தம் செய்வது? இது சம்பந்தமாக பிறப்பு-இறப்பு பதிவுத்துறை அதிகாரியளித்த பதில்: “குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களைப் பெறும் வழிமுறைகள் அனைத்தும் 1-1-2018- க்குப் பிறகு https://crstn.org/birth_death_tn/ என்ற இணையத்தள பக்கத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிகழும் பிறப்பு குறித்து தகவல் அளித்திட, ஒவ்வொரு மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவ அதிகாரிகள், ஊராட்சி என்றால் கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்றால் அதற்குரிய அலுவலர்கள், அரசு மருத்துவனை என்றால் அங்குள்ள பிறப்பு - இறப்பு பதிவாளருக்கும் தகவல் தெரிவிக்கப்படும...

வேலை தரும் சேவை: சமூகப் பணி இப்போது ஒரு தொழில்துறையாக மாறிவிட்டது

Image
வேலை தரும் சேவை: சமூகப் பணி இப்போது ஒரு தொழில்துறையாக மாறிவிட்டது உங்களைச் சுற்றியிருக்கும் முடியாதவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா? நம் அன்றாட வேலைகளுக்கு இடையே சமுதாயத்தில் புதிய மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறீர்களா? மேலே உள்ள கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம் என்றால், நீங்கள் சமூக சேவை குறித்த படிப்பை தாரளமாக படிக்கலாம். மனிதனை உளவியல் ரீதியாக அணுகும் ஆர்வம், பொறுமை, நிதானம், விடாமுயற்சி போன்றவை ஒருவரிடம் இருந்தால் இந்தப் படிப்பை தேர்ந்தேடுக்கலாம். சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனிதர்கள் அனைவருக்கும் உண்டு. அந்த எண்ணத்தின் உந்துதல் மாணவப் பருவத்தில் சற்று தீவிரமாக இருக்கும். பணத்தின் தேவை காரணமாக, சேவை மீதான ஈடுபாடு படிப்புடன் சேர்ந்தே முடிந்துவிடுகிறது. ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. சமூகப் பணி அல்லது சமூக சேவை (Social work) இப்போது ஒரு தொழில்துறையாக மாறிவிட்டது. இன்று தனது சேவையைச் சேவையாற்றுபவர்களுக்கும் அது அளிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், கைநிறையச் சம்பளம் அளிக்கும் பல வேலைவாய்ப்புகளைச் சமூகசேவை இன்று அளிக்கிறது. ஏன் படிக்க வேண்டும்? ...